தொடர்ந்து மிரட்டும் வெப்பநிலை உயர்வு

தொடர்ந்து மிரட்டும் வெப்பநிலை உயர்வு
Updated on
1 min read

கடந்த ஆண்டிலிருந்து ஒவ்வொரு மாதமும் உலக வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது. வரலாற்றிலேயே மிக வெப்பமான ஏப்ரல் மாதமாக 2024 ஏப்ரல் இருக்கிறது. கடந்த 11 மாதங்கள் இதுவரையில் பதிவான வெப்பமான மாதங்களாக இருந்துவருகின்றன. இது காலநிலை மாற்றத்தின் பிரதிபலிப்பாகக் கருதப்படுகிறது.

ஜூன் 2023 முதல் ஒவ்வொரு மாதமும், முந்தைய ஆண்டுகளின் அதே மாதங்களுடன் ஒப்பிடுகையில், வெப்பமான மாதங்களாக இருந்து வருகின்றன. 2024 ஏப்ரல் மாதத்துடன் முடிந்த 12 மாத காலத்தில் பதிவான உலகின் சராசரி வெப்பநிலை 1850-1900 தொழில்புரட்சிக்கு முந்தைய காலத்தின் சராசரியைவிட 1.61 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.

அதே போல பல மாதங்களாக கடல் மேற்பரப்பு வெப்பநிலையும் உயர்ந்துவருகிறது. இந்த மாற்றங்கள், இயற்கையான காலநிலை அமைப்பில் மனிதச் செயல்பாடுகள் ஒரு முக்கிய புள்ளியைத் தூண்டிவிட்டுவிட்டனவா என்பதை அறிவியலாளர்கள் ஆராய வழிவகுத்துள்ளது.

புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் வெளிவரும் பசுங்குடில் வாயுக்களே காலநிலை மாற்றத்திற்கு முக்கியக் காரணம். சமீபத்திய மாதங்களில், கிழக்கு பசிபிக் பெருங் கடலில் மேற்பரப்பு நீரை வெப்பமாக்கும் எல் நினோ நிகழ்வும் வெப்பநிலை உயர்வுக்குக் காரணம்.

“புவி வெப்பமடைதலை தொழிற் புரட்சிக்கு முந்தைய வெப்பநிலையைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிப்புக்குள் கட்டுப்படுத்தும் 2015 பாரிஸ் உடன்படிக் கையின் இலக்கை மீறும் அபாயத்தில் உலகம் உள்ளதாக தரவுகள் காட்டுகின்றன. புவி வெப்பமடைதலை 2 டிகிரி செல்சியஸுக்குக் கீழே வைத்திருப்பது, பசுங்குடில் வாயு வெளியீட்டு அளவைக் குறைப்பது பற்றி நாம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்” என்கிறார் நியூகேஸில் பல்கலைக்கழகத்தின் காலநிலை விஞ்ஞானி ஹேலி ஃபோலர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in