Published : 21 Oct 2023 06:06 AM
Last Updated : 21 Oct 2023 06:06 AM

ப்ரீமியம்
சூழலியல் பின்னணியில் ஒரு நாவல்

அமெரிக்காவில் 1852இல் வெளிவந்த அங்கிள் டாம்ஸ் கேபின் முதல் 2015இல் வெளியான நம்மூர் பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டி வரை, நாவல் என்கிற இலக்கிய உத்தியை, சமூக அவலத்தை வெளிச்சம்போட்டுக் காட்டப் பல படைப்பாளிகள் பயன்படுத்தியுள்ளனர். கடந்த இருபது ஆண்டுகளாக அந்தமான் -நிகோபார் தீவுக்கூட்டங்களில் பயணித்து எண்ணற்ற கட்டுரைகளையும் பல நூல்களையும் எழுதியுள்ள சூழலியல் ஆய்வாளர் பங்கஜ் ஷேக்சரியா எழுதிய The Last Wave என்கிற ஆங்கில நாவலின் மொழியாக்கம் இது.

இந்த நாவலின் மூலம் இந்தத் தீவுக் கூட்டங்களின் மேலும், அங்கு அழிவின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கும் ஜாரவா தொல்பழங்குடியினர் மேலும் வெளிச்சம் பாய்ச்சுகின்றார். வங்காள விரிகுடாவில் சிதறி இருக்கும் 571 அந்தமான் நிகோபார் தீவுகளின் 37 தீவுகளில் மட்டுமே பழங்குடியினர் வசிக்கின்றனர். அலையாத்தி காடுகளும், மழைக்காடுகளும் பவளத்திட்டுகளும் கொண்ட இந்தத் தீவுகளின் உயிர்ப்பன்மை அளப்பரியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x