Last Updated : 04 Oct, 2022 06:30 AM

 

Published : 04 Oct 2022 06:30 AM
Last Updated : 04 Oct 2022 06:30 AM

சேதி தெரியுமா?

செப்.25: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டு காலம் விளையாடியவர் இவர்.

செப்.26: திரைத் துறையில் வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதின் 2020ஆம் ஆண்டுக்கு நடிகை ஆஷா பரேக் தேர்வு செய்யப்பட்டார்.

செப்.26: இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஎம்ஆர்) புதிய தலைமை இயக்குநராக டாக்டர் ராஜீவ் பால் நியமிக்கப்பட்டார்.

செப்.28: இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் நியமிக்கப்பட்டார்.

செப்.29: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் எட்டு துணை அமைப்புகளை மத்திய அரசு ஐந்தாண்டு காலத்துக்குத் தடை செய்தது.

செப்.29: மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக புதுச்சேரியைச் சேர்ந்த ஆர். வெங்கட்ரமணி நியமிக்கப்பட்டார்.

செப்.29: 36ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

செப்.29: திருமணம் ஆகாத பெண்களும் பாதுகாப்பாகக் கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

செப்.30: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்து முடிக்கும்வரை, பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக் கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x