Last Updated : 11 May, 2022 11:26 AM

 

Published : 11 May 2022 11:26 AM
Last Updated : 11 May 2022 11:26 AM

ப்ரீமியம்
தேசிய தொழில்நுட்ப நாள்: இந்தியாவின் தொழில்நுட்ப மைல்கற்கள்

பொக்ரான் அணுகுண்டு சோதனையின் போது எடுக்கப்பட்ட படம்

ஒவ்வோர் ஆண்டும் மே 11 அன்று தேசிய தொழில்நுட்ப நாளை இந்தியா கொண்டாடிவருகிறது. இந்த நாள் இந்திய வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக அமைந்திருக்கிறது. காரணம், 1998-ம் ஆண்டு மே 11 அன்று பொக்ரானில் அணுகுண்டு சோதனையை இந்தியா வெற்றிகரமாகச் செய்து முடித்தது. இதைச் சிறப்பிக்கும் வகையில் அந்த நாள் தேசியத் தொழில்நுட்ப தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் கண்டுபிடிப்பாளர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் அவர்களின் பங்களிப்புக்காக விருதுகளும் அங்கீகாரமும் வழங்கப்படுகின்றன. இந்த நாளில் இந்தியாவின் சில தொழில்நுட்ப சாதனைகளை நினைவுகூர்வோம்.

இந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் முன்னோடி (1954): இந்திய ஆராய்ச்சி மையம் 1954-ம் ஆண்டில் டிராம்பே அணு சக்தி நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது. ஹோமி ஜஹாங்கீர் பாபா இதன் தலைவராகச் செயல்பட்டார். அவரது மறைவுக்குப் பிறகு, 1966-ம் ஆண்டு முதல் ‘பாபா அணு ஆராய்ச்சி மையம்’ என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்திய அணுசக்தி ஆராய்ச்சிக்கு முன்னோடியாக இருக்கும் இந்த மையம், அணுசக்தி சக்தி வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x