

மரத்தான் ஒட்டப் பந்தயத்தைக் கூர்ந்து கவனிப்பதன் மூலம் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ளலாம். அதில் கலந்துகொள்ளும் வீரர்கள் அனைவரும் விருப்பத்துடன் பங்கேற்றவர்களே. அவர்கள் அனைவரும் முதலிடம் பெற வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களே. அனைவரும் அதற்காகக் கடுமையான பயிற்சியை மேற்கொண்டவர்களே. ஆனால், வெற்றிக் கோட்டை அனைவரும் முதலில் தொடுவதில்லை. வெற்றியாளர் மட்டும் அப்படி என்ன மாயாஜாலத்தை நிகழ்த்துகிறார்? மற்றவர்களைப் போல் தன்னுடைய திறனை முதலிலேயே வீணடிக்காமல், பந்தயத்தின் கடைசிக் கட்டத்தில் தேவையான விதத்தில் பயன்படுத்துவதன் மூலம் வெற்றிக் கொடியை நாட்டுகிறார். இந்தப் பண்பை எப்படி உங்கள் தேர்வுக்குப் பயன்படுத்தலாம் என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்:
தேர்வு நாள் என்பது உங்களின் திறமையைப் பரிசோதிக்கும் நாள் அல்ல. அது உங்கள் ஓராண்டு உழைப்புக்கான பலனை நீங்கள் அறுவடை செய்யப்போகும் நாள்.