Published : 10 Aug 2021 03:15 AM
Last Updated : 10 Aug 2021 03:15 AM

டிஎக்ஸ்சி வழங்கும் கல்வி உதவித்தொகை

பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருக்கும் மாணவர்களுக்கு டிஎக்ஸ்சி தொழில்நுட்ப நிறுவனம் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஸ்காலர்ஷிப்பை அறிவித்துள்ளது.

தகுதி: பயனாளர்கள் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் B.E./ B.Tec/ 2021-22 முதல் கல்வி ஆண்டில் பொறியியல் பிரிவுகளான CS/IT/EE/EC படிப்பவர்களாக இருக்க வேண்டும். 60 சதவீதம் மதிப்பெண்களைக் கடந்த ஆண்டு அவர்கள் படித்த வகுப்பில் பெற்றிருக்க வேண்டும். மாணவரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 4 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பயனாளிகளான மாணவர்கள் வேறு எந்த வகையிலும் கல்வி உதவித் தொகையை ஆண்டுக்கு ரூபாய் 6 ஆயிரம் அல்லது அதற்கு மேல் பெறாதவராக இருக்க வேண்டும். இந்தக் கல்வி உதவித்தொகையை டிஎக்ஸ்சி மற்றும் Buddy4study நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகள் பெற முடியாது.

உதவித்தொகை: கல்விக் கட்டணத்தில் 50 சதவீதம் அல்லது ஆண்டுக்கு ரூபாய் 40 ஆயிரம் (இதில் எது குறைவாக இருக்கிறதோ அது வழங்கப்படும்).

மாணவர்கள் இணையவழியில் இந்தக் கல்வி உதவித்தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: ஆகஸ்ட் 15. விண்ணப்பிப்பதற்கான இணைய தளம்: https://bit.ly/3jFeiVy

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x