Published : 06 Apr 2021 04:09 PM
Last Updated : 06 Apr 2021 04:09 PM

சேதி தெரியுமா?

தொகுப்பு: மிது 

மார்ச் 26: வங்கதேச சுதந்திரப் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதையொட்டி வங்கதேசத்தின் டாக்கா - மேற்குவங்கத்தின் புதிய ஜல்பய்குரி இடையே புதிய பயணிகள் ரயில் தொடங்கப்பட்டது.

மார்ச் 28: ஒரு நாள் கிரிக்கெட்டில் 5,000 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய இணை என்கிற பெருமையை ரோஹித் சர்மா-ஷிகர் தவான் ஜோடி பெற்றது. இதற்கு முன் இந்தப் பெருமையை சச்சின் டெண்டுல்கர் - சவுரவ் கங்குலி ஜோடி பெற்றிருந்தது.

மார்ச் 29: சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட எவர்கிவன் என்ற பெரிய கப்பல் ஒரு வார கால போராட்டத்துகுப் பிறகு மீட்கப்பட்டது. டிரெட்ஜர்கள், இழுவை படகுகள் மூலம் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது.

மார்ச் 30: உலகிலேயே முதன்முறையாக கரோனா தொற்றிலிருந்து விலங்கு களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ‘கார்னிவாக்-கோவ்’ என்ற தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கியுள்ளது.

மார்ச் 31: இந்தியாவிலிருந்து சர்க்கரை, பருத்தி ஆகியவற்றை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் முடிவெடுத்தது. இந்தியாவிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதில்லை என்று 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவை அந்நாடு கைவிடுவதாக அறிவித்தது. ஆனால், இந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏப்.1: நாடு முழுவதும் 45 வயது மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியது.

ஏப்.1: இந்திய திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கெனவே பத்மபூஷண், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

ஏப்.1: தமிழகத் தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா 48 மணி நேரம் பிரச்சாரம் மேற்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x