Published : 23 Mar 2021 10:02 AM
Last Updated : 23 Mar 2021 10:02 AM

சேதி தெரியுமா?

தொகுப்பு: மிது 

மார்ச் 12: பிரேசிலைச் சேர்ந்த கரினா ஒலியோனி (38) என்ற பெண், எத்தியோப்பியாவில் எர்டா அல் என்ற எரிமலையிலிருந்து வெளியேறிய 1,187 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள எரிமலைக் குழம்பு ஏரியைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
மார்ச் 13: 2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் இமையத்துக்கு ‘செல்லாத பணம்’ நாவலுக்காக அறிவிக்கப்பட்டது.
மார்ச் 13: ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதியாட்டத்தில் மும்பை சிட்டி முதன்முதலாக சாம்பியன் பட்டம் வென்றது.
மார்ச் 14: சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து 10 ஆயிரம் ரன் எடுத்த முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையை மிதாலி ராஜ் படைத்தார். உலக அளவில் இதற்கு முன் இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ஸ் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
மார்ச் 15: ‘இயற்கை’, ‘பேராண்மை’, ‘ஈ’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் உடல்நலக் குறைவால் காலமானார்.
மார்ச் 16: இந்தியாவின் முதல் வன சிகிச்சை மையம் உத்தரகாண்ட் மாநிலம் கலிகாவில் தொடங்கப்பட்டது.
மார்ச் 16: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தமிழக வீராங்கனை பவானிதேவி தேர்வானார். வாள் வீச்சில் பங்குபெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
மார்ச் 18: உலகில் மிகவும் மாசுபட்ட 30 நகரங்களில் டெல்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று ‘ஐக்யூ ஏர்’ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இப்பட்டியலில் இந்தியாவின் 20 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x