Published : 07 Nov 2023 06:03 AM
Last Updated : 07 Nov 2023 06:03 AM

ப்ரீமியம்
தமிழ் இனிது 21: ஆய்த எழுத்தை நினைவுகூர்வோமா?

ஆய்தமும் ஆயுதமும்: ‘ஆய்தல்’ எனில் ‘நுணுகிப் பார்த்தல்’ எனப் பொருள் (தொல்-813). ஆய்வு செய்பவர் ‘ஆய்வாளர்.’ உயிரெழுத்து மெய்யெழுத்துப் போல அன்றி, ‘நுணுக்கிய ஓசையோடு வருவதே ஆய்த எழுத்து’. இதையே, அஃகேனம் (அக்கன்னா) தனிநிலை, முப்புள்ளி எனவும் சொல்வர். ‘ஆயுதம்’ - தொழிலுக்கான கருவி. அதனால்தான், ‘ஆயுத பூசை’ நடக்கிறது. உயிருக்கும் மெய்க்கும் நடுவில் ஆயுதத்தை வைக்கலாமா? முப்புள்ளி எனும் பெயரால், கேடயம்(?) என்றெண்ணி, ‘ஆயுத எழுத்து’ என எழுதுகிறார்களோ? ஆயினும், ‘ஆய்த எழுத்து’ என்பதே சரி.

நினைவு கூர்வதா? நினைவு கூறுவதா? - அன்பிற்கு உரியவரின் நினைவை மீண்டும் நினைத்துப் பார்ப்பதை ‘நினைவு கூர்தல்’ என்பதா? ‘நினைவு கூறுதல்’ என்பதா? ‘கூர்ந்து’ என்பது ‘மிகுந்து, குவிந்து’ என்னும் பொருளில் வரும். ‘அன்பு கூர்ந்து’ ‘கூர்ந்து கவனி’ ‘நினைவு மிகுந்து மரியாதை செய்வது’ என்பதால் ‘நினைவு கூர்தல்’ என்பதே சரியானது. ‘இடும்பை கூர் என்வயிறே’ – ஔவையார் (நல்வழி-11). எனில், ‘நினைவு கூறுதல்’ எனும் தொடர், ‘நினைவை எடுத்துச் சொல்லுதல்’ என வலிந்து பொருள் கொள்வது தவறாகவே அமையும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x