Published : 10 Oct 2023 06:00 AM
Last Updated : 10 Oct 2023 06:00 AM

ப்ரீமியம்
தமிழ் இனிது 18: அய்யாவும் மய்யமும்

நண்பர் ஒருவர், “‘ஐயா', ‘அய்யா' இரண்டில் எது சரி?, கமல் கட்சியில் ‘மய்யம்’ என்பது சரியா? ‘மையம்’தானே சரி?’ என்று கேட்டார். ‘ஐயா’வில் உள்ள ‘ஐ’ எழுத்தை, அதற்குரிய இரண்டு மாத்திரை அளவுக்கு அழுத்தி உச்சரிக்காமல், ஒன்றரை மாத்திரை அளவில் ‘அய்யா’ என்றே பேசுகிறோம். அதுபோலவே, ‘சமையல்’, ‘சமயல்’ ஆகிறது. ‘மழை பெய்கிறது’ என்பதை, ‘மழ பெய்யுது’ என்றே சொல்கிறோம். இதை ‘ஐகாரக் குறுக்கம்’ என்று இலக்கணம் சொல்கிறது. அதாவது, ‘ஐ’ எனும் இரண்டு மாத்திரை, தன் ஓசையில் குறுகுவது.

‘தற்சுட்டு அளபு ஒழி ஐ, மூவழியும் நையும்’ - நன்னூல்-95. கை, பை, எனவரும் ஓரெழுத்து ஒருமொழி தவிர்த்து, தொடரில் வரும் ‘ஐ’யை, 2 மாத்திரைக்கு உச்சரிப்பதில்லை. ‘ஐ’ முதலில் வந்து ‘ஐயா’, ‘அய்யா’ ஆகிறது. இடையில் வந்து, ‘உடைமை’- ‘உடமை’ ஆகிறது, இறுதியில் வந்து ‘தவளை’, ‘தவள’ ஆகிறது. இது பற்றித் தொல்காப்பியரிடம் கேட்டால், ‘அகர இகரம் ஐகாரம் ஆகும்’ (தொல்-நூற்பா எண்-54) என்று, ‘ஐ’, ‘அய்’ இரண்டையுமே பயன்படுத்தச் சொல்லி, வியக்க வைக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x