Published : 26 Sep 2023 06:07 AM
Last Updated : 26 Sep 2023 06:07 AM

ப்ரீமியம்
தமிழ் இனிது? - உளமார / மனமாற வாழ்த்தலாமா?

மனம், குளம், மரம் – இவை போலும் சொற்கள் தொடரில் வரும்போது, ‘அத்து’ எனும் பகுபத உறுப்பு (சாரியை) சேர்ந்து, ‘மனத்தில் நினைத்தேன்’, ‘குளத்தில் குளித்தேன்’, ‘மரத்தில் ஏறினேன்’ என்று மாறுவது மரபு. எனினும் ஏனோ, ‘மனம்’ மாறி(?) ‘மனதில்’ என்று பேசுவது பழக்கமாகி, பிறகு அதுவும் தொடர்ந்து வழக்கமாகி, எழுத்திலும் வந்துவிட்டது.

பாரதி, ‘மனதில் உறுதி வேண்டும்’ என்றே பாடுகிறார். ‘மனத்தில்’ என்பது ‘மனதில்’ என்றானதற்காக, ‘குளதில்’ குளிக்க முடியாது. ‘மரதில்‘ ஏறவும் கூடாது. அப்படியான வழக்குகள், தமிழில் இல்லை. ஆனால், இங்கே பேச்சு வழக்கில் உள்ள ‘மனசு’, ‘மனசில் ஆயோ?’ என்று மலையாள வழக்கிலும் உள்ளதை, ஒப்பாய்வு செய்யலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x