Published : 08 Aug 2023 06:04 AM
Last Updated : 08 Aug 2023 06:04 AM

ப்ரீமியம்
தமிழ் இனிது 10 - ‘மங்கள’கரமான மங்கலம்!

“நிகழும் மங்களகர மான” என்று நமக்கு திருமண அழைப்பிதழ்கள் வருவதைப் பார்க்கலாம். இசையரங்குகளில் நிகழ்ச்சி முடிந்ததை, “மங்கலம் பாடியாச்சு” என்கிறார்கள். இதில் எது சரியான சொல்? ‘மங்களம்’ எனும் சொல், நிறைவு எனும் பொருளில் புழங்குவதை அறியாமல், அழைப்பிதழில் போடுவது தவறு! ‘மங்கலம்’ என்பதுதான் சரியான வழக்கு! “மங்கலம் என்ப மனைமாட்சி” (குறள்-எண்-60). இந்த ‘மங்கலம்’, இனாமாகத் தரப்பட்ட ஊர்ப் பெயர்களிலும் வருவதைப் பார்க்கலாம்.

ஆகிய, முதலிய வேறுபாடு என்ன? - ஒன்றில் தொடங்கி, தொடரும்போது, முதலிய எனும் சொல் வரும். “கல்வி முதலிய சமூகத் தேவைகளை நிறைவேற்றுவது அரசின் கடமை”. சொல்ல வேண்டியவற்றை முழுவதுமாகச் சொல்லி முடிக்கும் இடத்தில் ஆகிய எனும் சொல் வரும். “இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழிலும் வல்லவர்”. இவற்றை இடம் மாற்றிப் போட்டால், பொருள் மாறிப் போகும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x