Published : 13 Jun 2023 11:15 AM
Last Updated : 13 Jun 2023 11:15 AM

ப்ரீமியம்
வெளிநாட்டில் கல்வி: வலைவீசும் போலிப் பல்கலைக்கழகங்கள்

முன் எப்போதும் இல்லாத அளவில் வெளிநாட்டுக்குச் சென்று படிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக அதிகரித்துவருகிறது. அதேநேரத்தில், போலிப் பல்கலைக்கழகங்களில் பணம் கட்டி ஏமாறுதல், போலிப் பட்டப்படிப்பு, போலி விசா என மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் ஏராளம். போலி பல்கலைக்கழகங்களை அடையாளம் காண்பது எப்படி?

அங்கீகாரம்: கடந்த காலத்தில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்குப் படிக்கச் சென்ற மாணவர்கள், போலி சேர்க்கை அனுமதி, போலி விசா பிரச்சினைகளில் சிக்கியது நினைவிருக்கலாம். வெளிநாட்டில் படிக்க ஏற்பாடு செய்யும் முகவர்கள் மூலம் வெளிநாடு சென்றவர்கள் இவர்கள். இது இணைய யுகம். எல்லாம் இணையமயமாகிவிட்ட இன்றைய சூழலில், முன்புபோல் அல்லாமல் எல்லாத் தகவல்களும் இணையத்தில் கிடைக்கின்றன. ஆகவே, வெளிநாட்டில் படிக்க முகவர்களை நாட வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான தேடலை இணையத்தில் மேற்கொண்டாலே போலிகளிடமிருந்து எளிதாகத் தப்பிவிடலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x