Last Updated : 06 Jun, 2023 06:08 AM

 

Published : 06 Jun 2023 06:08 AM
Last Updated : 06 Jun 2023 06:08 AM

ப்ரீமியம்
அஞ்சலி | இந்திய இயற்பியலில் ஒரு சகாப்தம்!

சென்னையில் உள்ள இந்தியக் கணித அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும் இந்திய இயற்பியல் துறையில் பேராளுமையாகவும் திகழ்ந்த பேராசிரியர் ஜி. ராஜசேகரன் மே 29 ஆம் தேதி அன்று தனது 87ஆவது வயதில் மறைந்துவிட்டார். இந்தியாவில் துகள் இயற்பியல் ஆராய்ச்சித் துறைக்கு அவர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பற்ற பங்கை அளித்தவர். சுதந்திர இந்தியாவின் முதல் தலைமுறை இயற்பியல் அறிஞர்களில் முக்கியமானவர். சர்.சி.வி.ராமன், மேக்நாட் சாகா, சத்யேந்திர நாத் போன்ற மாபெரும் இயற்பியல் அறிஞர்களின் வழித்தோன்றலாக விளங்கியவர்.

தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 1936இல் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் ஜி. ராஜசேகரன். தனது கல்லூரிப் படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் முடித்து 1957இல் ஹோமிபாபாவால் தொடங்கப்பட்ட பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி மாணவராக இணைந்தார். அங்கு வழங்கப்பட்ட பயிற்சியில் முதல் மாணவராகச் சாதனை நிகழ்த்தினார். 2007இல் நடைபெற்ற பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் பொன் விழாவில் இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கையால் இச்சாதனைக்காக விருது பெற்றார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x