

தமிழகத்தில் ரியல் எஸ்டேட் துறையை முறைப்படுத்தவும், வீடு வாங்குபவர்களின் நலன்களை பாதுகாக்கவும் தமிழ் நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (TNRERA) பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பல்வேறு உத்தரவுகளை ஆணையம் பிறப்பித்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, ஒரு திட்டத்தை முடித்த பின் கட்டுமான மேம்பாட்டாளர்கள், நிறைவடைந்த தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள், அதுகுறித்த முறையான அறிவிப்பை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அத்துடன் மேம்பாட்டாளர்கள் கடமை முடிந்துவிடாது. திட்டத்தை அனுமதித்த தகுதிவாய்ந்த உள்ளூர் திட்டமிடல் குழுமங்கள் (Planning Authorities) மற்றும் பல்வேறு அரசுத்துறைகள் விதித்த நிபந்தனைகள் அனைத்தையும் முழுமையாக பூர்த்தி செய்திருக்க வேண்டும்.