

தமிழகத்தில் 2500 சதுரடி நிலத்தில் 3500 சதுரடி வரை வீடு கட்டினால்,சுயசான்று அடிப்படையில் உடனடி அனுமதி பெறும் வசதி உள்ளது போல், சமீபத்தில், தொழிற்சாலை கட்டிடங்களுக்கும் இந்த வசதியை தமிழக அரசு அளித்தது.
அதன்படி, 7500 சதுரடி மனையில், 5 ஆயிரம் சதுரடி வரையிலான பசுமை, வெள்ளை வகை தொழிற்சாலைகளுக்கான கட்டிடங்களை அதிகபட்சம் 32 அடி உயரம் வரை கட்ட சுயசான்று அடிப்படையில் அனுமதியளிக்கப்படுகிறது.