

சொந்த வீடு கட்டுவோர், கட்டிட அனுமதிக்கு காத்திருப்பதை தவிர்க்கவே சுயசான்று அடிப்படையில் கட்டிட அனுமதி வழங்கும் திட்டத்தை கடந்தாண்டு தமிழக அரசு கொண்டுவந்தது.
அதாவது 2500 சதுரடி மனை பரப்பில், 3500 சதுரடி வரையில் குடியிருப்பு கட்டிடம் அதாவது, அதிகபட்சம் ஒரு தரைதளம் மற்றும் முதல் தளம் அல்லது, ஒரு தரைகீழ் தளம், இரண்டு தளங்கள் அதிகபட்சம் 10 மீட்டர் உயரத்தில் கட்டப்படும் கட்டிடமாக இருக்க வேண்டும்.
இந்த கட்டிடத்துக்கு சுயசான்று அடிப்படையில் விண்ணப்பித்த சில மணி நேரங்களில் அனுமதி பெற முடியும். இதற்கு நில உரிமையாளர் அல்லது, நில குத்தகைதாரர் அல்லது பொது அதிகாரம் பெற்றவர் கட்டிடம் கட்டவோ, மறு கட்டுமானம் செய்யவோ விண்ணப்பத்தை அளிக்க தகுதியானவராவார்.