சிமெண்ட், ஜல்லி, மணல் எவ்வளவு?

சிமெண்ட், ஜல்லி, மணல் எவ்வளவு?
Updated on
1 min read

கட்டிடப் பணிகளின் பல நிலைகளுக்கும் சிமெண்ட் பயன்பாடு அவசியமானது. அடித்தளம், பீம் ஆகியவை அமைப்பது தொடர்பான பணிகளுக்கு அதிக அளவில் சிமெண்ட் தேவைப்படும். செங்கல் கட்டுமானத்துக்குக் குறைவான அளவில் தேவைப்படும். அதேபோல் மேல் பூச்சுக்கும் கொஞ்சம் அதிக அளவில் தேவைப்படும்.

ஆனால், இவற்றுள் முக்கியமானது அடித்தளம், பீம் அமைக்கும் பணிகள்தாம். இம்மாதிரியான பணிகளுக்கு சிமெண்ட், மணல், ஜல்லி ஆகியவற்றைச் சரியான விகிதத்தில் கலக்க வேண்டியது அவசியம்.  இல்லையென்றால் கட்டிடத்தின் ஆயுள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

சிமெண்ட், மணல், ஜல்லி ஆகியவை 1:2:4 என்ற விகிதத்தில் கலக்க வேண்டும். இதில் சிமெண்டின் பாதி அளவுக்குத் தண்ணீர் சேர்க்க வேண்டும். உதாரணமாக 50 கிலோ சிமெண்டுக்கு 100 கிலோ மணல், 200 கிலோ ஜல்லி ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையுடன் 25 கிலோ தண்ணீரைச் சேர்க்க வேண்டும்.

இதில் இந்தச் சேர்க்கை அதிகமானாலும் குறைந்தாலும் கலவையின் தரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தண்ணீரின் அளவு அதிகமானால் கான்கிரீட் கலவையின் தரம் குறைந்துவிடும். சிமெண்டில் உள்ள நுண்ணிய துகள்கள் சுருங்கி அங்கே காற்று உட்புகுந்து கான்கிரீட்டின் தரம் பாதிக்கப்படும். தண்ணீரின் அளவு குறைந்தால் கலவை சரியான பிணைப்பில்லாமல் இருக்கும். இதனால் கலவையின் உறுதித் தன்மை பாதிக்கப்படும்.

கான்கிரீட் கலவையை உண்டாக்க உப்புத் தண்ணீர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதனாலும் கான்கிரீட் கலவையின் தரம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. சில இடங்களில் விழிப்புணர்வு இல்லாமல் உப்புத் தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். கான்கிரீட் கலவையின் உறுதித்தன்மையை அதிகரிக்கச் சில பொருட்களை அதனுடன் சேர்க்கலாம். எரிசாம்பல், எரி உலைக் கசடுகள் போன்றவற்றைக் கலக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in