

நிரஞ்சனா
கலை என்பது கண்ணுக்குப் புலப்படாத உணர்வுகளைக் கண்ணுக்குப் புலப்படும் வடிவில் காட்டுவது. மேடையில் ஏறியதும் தன் குரலை மாயையாக்கி, அந்த மாயையைச் சிரிப்பாக்கும் வித்தையை நிகழ்த்துகிறார் மாயக்குரல் கலைஞரான நிக்கி நிரஞ்சனா.
நிரஞ்சனாவின் தந்தை ஒரு மாயக்குரல் கலைஞர். அதாவது, தான் பேசுவது வெளியே தெரியாத வகையில் வேறோர் இடத்தில் இருந்து அந்தக் குரல் ஒலிப்பது போலக் காட்டுவது. ‘அவர்கள்’ படத்தில் ‘ஜூனியர்..’ பாடலில் நடிகர் கமல்ஹாசன் தன் கையில் இருக்கும் பொம்மை பாடுவதைப் போலச் செய்வார் அல்லவா, அதுதான் ‘வென்ட்ரிலக்விசம்’ (Ventriloquism) எனும் மாயக்குரல் கலை.