

நண்பர் ஒருவர், “நீங்கள் மிக முக்கியமான விஷயம் குறித்து எழுதுகிறீர்கள். இதைப் பற்றி யாராவது விரிவாக எழுதி, பேச மாட்டார் களா என்று அடிக்கடி நினைத்தது உண்டு” என்று சொன்னதோடு அவருடைய வீட்டில் நிகழ்ந்ததைப் பற்றியும் கூறினார்.
அவருடைய மாமா கிராமத்தில் விவசாயத்தைக் கவனித்துவந்தார். பிறருடன் அதிகமாகப் பேச மாட்டார். நிறைய யோசிப்பார், புத்தகங்கள் வாசிப்பார். திருமணம் வேண்டாமென்று சொல்லிவிட்டுத் தனியாக இருந்தார்.