

பெண்களின் பொருளாதாரத் தற்சார்பு இன்றைய காலத்திலும் நிலைத்தன்மை அற்று இருப்பதை மறுக்க முடியாது. பெண்கள் கல்வி கற்றதும் பொருளாதார விடுதலையை நோக்கி நகர்ந்ததும் இந்தியச் சமூகத்தில் அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை. தொடர்ச்சியான சமூகப் போராட்டங்களாலும் எழுத்துகளின்
வழியான சிந்தனை மாற்றங்களாலும் பலரது தியாகங் களாலும் அரசியல் சட்டங்களாலும் சாத்தியமானது. கல்வி கற்று உயர்ந்த பதவிகளில் இருக்கும் பெண்கள்கூடத் தங்களின் வருமானத்தைத் தங்களின் விருப்பப்படி செலவிட முடியாத சூழலே நம் சமூகத்தில் பெரும்பான்மையாக நிலவுகிறது. பணிக்குச் செல்லும் பெண்கள் பலரின் ஏடிஎம் கார்டுகள் அவர்களது கணவரிடமே இருப்பதையும் மறுக்க முடியாது.