

‘மூடிக்கிடந்த கதவுகள் முற்றுகை தளர்ந்தது
தேடித்தேடி அலுத்த வாழ்வில் பாதை ஒன்று தெரியுது
யுகங்களின் மௌனத்தை இன்று நாம் கலைக்கிறோம்
சேருவோம் தோழி நாம் சோர்வகற்றிச் சேருவோம்
பொறுமையே உயர்வு என்னும் பொய்மையை உடைத்தெறி
அடக்கி அடக்கி நம்மை ஏய்க்கும் சிந்தனையைச் சிதறடி…’
1992இல் ‘தமிழகப் பெண்கள் ஒருங்கிணைப்பு இயக்கம்’ திருச்சியில் ஒருங்கிணைத்த மூன்று நாள் மாநாட்டில் பாடப்பட்ட பாலியல் வன்முறைக்கு எதிரான பாடல் இது. ஒவ்வொரு பருவத்திலும் பெண்கள் எதிர் கொள்ளும் வன்முறைகளைப் பற்றிய விரிவான விவாதங்களை மையப்படுத்தியிருந்தது இம்மாநாடு. பெண்களின் பகிர்ந்துகொள்ளுதல், உரையாடல், நாடகம், கோரிக்கைகள், பாடல், ஊர்வலம் என்றிருந்தது மாநாட்டு அரங்கம்.