

முன்னெடுங்காலம் போல் அல்லாது, இப்போது நாகரிகம் உறுதியாயிருக்கிறது. ‘உங்கள் வயது என்ன? உங்கள் சம்பளம் எவ்வளவு? ஏன் குண்டாக இருக்கிறீர்கள்? குழந்தை இல்லையா?’ என்பது போன்ற கேள்விகளும் உடல் அமைப்பை, உடல்குறையைச் சொல்லும் சொற்களும் தவிர்க்கப்படுகின்றன. பொதுவில் அழைக்கப்படும் சொற்களில் கண்ணியம் காப்பதைப் பலரும் உறுதிசெய்கின்றனர்.
சமூகத்தில் பெண்களை மதிக்காதவர்களுக்கு மரியாதை வழங்கப்படுவதில்லை. வீட்டு வேலைகளில் பங்கெடுப்பதை ஆண்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் காலம் வந்திருக்கிறது. முன்பெல்லாம் வீட்டுக்குத் திருமணப் பத்திரிகைகள் வரும். அவற்றில் குடும்பத் தலைவராக ஆணின் பெயரை மட்டுமே எழுதியிருப்பார்கள். இப்போது கணவன் - மனைவி இருவரது பெயர்களும் இணைந்தே வருவது ஒரு சிறிய எடுத்துக்காட்டு.