

பெண்கள்தான் இவ்வுலகின் அச்சாரம், ஆணிவேர், இவ்வுலகத்தைச் சுழற்றிவிடும் சக்தி. பெண்ணே குடும்பத்தின் அஸ்திவாரம். எந்த ஒரு சூழலிலும் பிரச்சினையிலும் துணிவோடு, அர்ப்பணிப்போடு, நேர்மையோடு செயல்படுவது பெண்களுக்கே உரிய குணம்.
தன் தகுதி, திறமை, ஆளுமை, பாதையை உணர்ந்துகொண்டு இந்தச் சமூகத்தின் புறக்கணிப்பு களையும் கேலி, கிண்டல், விமர்சனங்களையும் தாங்கிக் கொண்டு புன்னகையோடு வலம்வரும் பெண்கள் ஏராளம். அவர்களால்கூட எளிதாகக் கடந்து போக முடியாத சில தருணங்கள் உண்டு. அவை பெரும்பாலும் வெளிக்காட்டப் படாத ஊமைக்காயங்கள். வெளியில் சிரிப்பும் களிப்புமாகத் தோன்றும் அவர்களது அகக்கண்ணில் ரத்தம் வடிவதை அவ்வளவு சாதாரணமாக யாராலும் கண்டறிந்துவிட முடியாது.