

நானும் என் மனைவியும் அரசு ஊழியர்கள். குழந்தைகள் மூவரும் பள்ளி, கல்லூரி என வெளியூரில் தங்கிப் படித்துவருகின்றனர். எங்களுக்குத் திருமணமனான நாள் முதல் என் மனைவிக்குக் கணவனாக மட்டுமல்லாமல் உற்ற தோழனாகவும் இருக்க வேண்டும் என முடிவெடுத்து அதைச் செயல்படுத்தியும் வருகிறேன். என்னை வேலை செய்யும்படி ஒருநாளும் என் மனைவி சொன்னதில்லை. ஆனால், வீட்டு வேலைகளில் நான் பங்கெடுத்துக்கொள்வதால் என் மனைவிக்கு வேலைப்பளு குறைவதோடு அவரும் நேரத்துக்கு அலுவலகத்துக்குப் புறப்பட உதவியாக இருக்கும் என்பதால் நாள்தோறும் வேலைகளைச் செய்வேன்.
தெருக்குழாயில் இருந்து தண்ணீர் பிடித்து வருவது, சமையலுக்குக் காய்கறிகளை நறுக்குவது, துணிகளைக் காயப்போடுவது போன்றவை என் அன்றாட வேலைகள். சிலநேரம் விறகடுப்பில் சமைக்கும்போது அடுப்பை எரியவிடுவது என் பொறுப்பு. அதைப் பார்த்த எங்கள் ஊர்ப் பெண்கள், “என்னங்க அக்கா, மச்சானை அடுப்பெரிக்க விட்டிருக்கீங்க?” என்று கேலியாகக் கேட்டனர். அதைக் கேட்டு என் மனைவி சற்றும் கோபப்படாமல், “பெண் கல்விக்கு எதிரான கருத்தை உடைத்தெறிய முயன்ற பாரதிதாசனைப் படித்தவர்தான் உங்க மச்சான்.