

நான் ஒரு வங்கிப் பணியாளர். எனது வாசிப்புப் பயணம் எட்டாம் வகுப்பில் தொடங்கியது. அப்போது என் ஆசிரியர் ஒருவர் பரிந்துரைத்த புத்தகம், ‘படிப்பது சுகமே’. அந்த நூல் என்னுள் வாசிப்பின் இன்பத்தையும், புத்தகத்தின் மகத்துவத்தையும் ஆழமாக விதைத்தது.
அதன் பிறகு ‘ஏழாவது அறிவு’, ‘ஓடும் நதியின் ஓசை’, ‘மனதில் உறுதி வேண்டும்’, ‘ஆத்தங்கரை ஓரம்’ போன்ற நூல்களை வாசித்தேன். புத்தகங்களுடன் செலவிடும் நேரம்தான் நான் ஓய்வெடுக்கும் நேரம்.