

பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பங்களிடையே பெண் கருக்கொலை நடப்பதாகத் தெரியவந்துள்ளது. 2017 – 2021க்கு இடைப்பட்ட காலத்தின் குழந்தை பிறப்பு விகிதத்தை பிரிட்டனின் சுகாதார மேம்பாட்டுத் துறை ஆய்வுசெய்ததில் இது கண்டறியப்பட்டது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பங்களில் 113 ஆண்களுக்கு 100 பெண் குழந்தைகள் என்கிற விகிதத்தில் பாலின விகிதம் அமைந்துள்ளது. பிரிட்டனில் அனுமதிக்கப்பட்ட பாலின விகிதம் 107 என்கிற நிலையில் இது அங்கே பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது.