Last Updated : 02 Apr, 2023 09:44 AM

 

Published : 02 Apr 2023 09:44 AM
Last Updated : 02 Apr 2023 09:44 AM

ப்ரீமியம்
கிராமத்து அத்தியாயம் - 13: கொடிக்கா சண்டை

பாரததேவி

வாகினி அப்போதுதான் வேலை செய்து முடித்தாள். நேரம் இரவு ஒரு சாமத்துக்கு ஆகிவிட்டது. அதற்குப் பிறகுதான் அவள் புருசன் அய்யனாரு ஆடுகளைக் கொண்டுபோய் கெடையில் விட்டுவிட்டு வருவான். அதன் பிறகு சாப்பிட்டுப் படுப்பான். தினமும் கூலியாக ஒரு மரக்கால் (நாலு படி) குதிரைவலியோ வரகோ கொண்டு வருவான். வாகினியால் வேலைக்குப் போக முடியாது. அவளுக்கு அண்டியும் சவலையுமாக இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களைப் பார்க்கவும் இந்தத் தானியங்களைக் குத்திப் புடைத்து அரிசியாக்கிவைத்துவிட்டுப் போய் விறகு பெறக்கி வர வேண்டும்.

ஒரு மரக்கால் வரகு குத்திக் காய்ச்சினால் நாலு உருண்டை சோறு இருக்கும். பிள்ளைகளுக்குக் கொஞ்சம் ஊட்டியது போக ராத்திருக்கு இவளும் இவள் புருசனும் ஆளுக்கு ஒரு உருண்டை சாப்பிடுவார்கள். பிறகு காலையில் ஒரு உருண்டை சோறை ஆளுக்குப் பாதியாகப் பிரித்துச் சாப்பிடுவார்கள். மீதமிருக்கும் ஒரு உருண்டைச் சோறை மதியானச் சாப்பாட்டுக்காகப் புருசனுக்கு வைத்துக் கொடுத்துவிடுவாள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x