Published : 12 Mar 2023 10:15 AM
Last Updated : 12 Mar 2023 10:15 AM
நாம் முன்னேறி விட்டதாக நம்பிக் கொண்டிருக்கும் 21ஆம் நூற்றாண்டின் குடும்ப அமைப்பிலேயே ஆணுக்கு நிகரான முக்கியத்துவமும் அங்கீகாரமும் பெண்ணுக்குக் கிடைக்கப்பெறாத நிலையில், பெண்ணடிமைத்தனம் இருள்போல் சூழ்ந்திருந்த காலத்தில் பெண்களுக்கு விடிவென்பது தூரத்து வெளிச்சமாகக்கூட இல்லை. ‘சமூகக் கட்டுப்பாடு’ என்னும் புதைகுழிக்குள் தள்ளப்பட்டு மூச்சுத் திணறிக்கொண்டிருந்த பெண்கள் கல்வி, கலை, இலக்கியம், தொழில், அரசியல் என ஒவ்வொரு துறையிலும் தங்களுக்கான உரிமையை நிலைநாட்டப் போராட வேண்டியிருந்தது. சில நேரம் ஆண்களின் பெயருக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளும் அவலத்தைக்கூடச் செயல்படுத்த வேண்டிய நிலையில் இருந்தார்கள். ஆண் வேடமிட்டுப் பெண்கள் போரிட்டதாகவும் படைத்தலைமை வகித்ததாகவும் ஆணின் பெயரில் இலக்கியம் சமைத்ததாகவும் எத்தனையோ கதைகள் நம்மிடையே உண்டு. பெண்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தகூடப் பெண் என்கிற அடையாளம் தடையாக இருந்ததைத்தான் இவை உணர்த்துகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT