Last Updated : 22 Jan, 2023 09:20 AM

 

Published : 22 Jan 2023 09:20 AM
Last Updated : 22 Jan 2023 09:20 AM

ப்ரீமியம்
கிராமத்து அத்தியாயம் - 8: அக்கா குருவி

வரகுணம் கிராமத்திலிருந்து எல்லாரும் குல தெய்வம் வனப்பேச்சியைக் கும்பிடுவதற்காக அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் கோயிலுக்கு மாட்டுவண்டி கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள். இணைபிரியாமல் இருக்கும் அக்காவான அன்னம்மாளும் தங்கச்சியான சின்னம்மாளும் அவர்களோடு புறப்பட்டார்கள். குலதெய்வக் கோயிலுக்குப் போய் வருவதற்கு அருள்தர வேண்டும் என்பதற்காக ஊர் மந்தையில் இருக்கும் தெய்வத்தை ஊர்மக்கள் கும்பிட்டிக்கொண்டிருந்தனர். அப்போது வண்டியைக்கூடப் பூட்டியிருக்கவில்லை. அதற்குள் அக்காவும் தங்கையும் வண்டியில் ஏறி உட்கார்ந்துகொண்டனர்.

அக்கா அன்னம்மா தங்கச்சியிடம், “செலாத்தலா உக்கார்ந்துக்கோ. இப்ப வாரவ எல்லாவளும் பூசணிக்காத் தண்டியில இருக்கா. நம்மளை ஒடுக்கி ஒரு மூலையில தள்ளீருவா” என்று சொல்ல, அக்கா சொல்லை மீறாத தங்கச்சியும் காலை நீட்டி உட்கார்ந்துகொண்டு, “எக்கா வெத்தலை போடுவோமா?” என்றாள். “போடுவோம்” என்றவள், “உனக்கு எத்தனை தடவை சொல்லுறது காணப்பயத்தை பதமா வறுக்காத கொஞ்சம் தீயும்படியா வறுன்னு” என்றாள் கொஞ்சம் கோபமாக. “என்னக்கா எதுவும் தப்பு தண்டா செஞ்சிட்டனா? பொறுத்துக்கோக்கா பொறுத்துக்கோ” என்று கெஞ்சினாள் தங்கை. “அதெல்லாம் ஒன்னுமில்லை. இப்ப நம்ம வச்சிருக்க காணப்பயத்து துவையல் பொது பொதுன்னு வண்டிக்குள்ளேயே சுத்தி சுத்தி மணக்கு. எவளும் எனக்கு இம்புட்டுத் துவைய கொடுன்னா என்ன செய்ய?” என்றாள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x