Published : 22 Jan 2023 09:07 AM
Last Updated : 22 Jan 2023 09:07 AM

ப்ரீமியம்
வாசிப்பை நேசிப்போம்: ஆளுமைத் திறனை வளர்க்கும் வாசிப்பு

‘உடலை வலுப்படுத்துவது உடற்பயிற்சி. மனத்தை வலுப்படுத்துவது வாசிப்பு’ என்று என் சிறு வயதில் என் அப்பா கூறியது என் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அன்று நாளிதழ்களில் ஒரு வரி விடாமல் வாசிக்கும் பழக்கம், பாடநூல்களைத் தாண்டி அம்புலி மாமா, கோகுலம் போன்ற சிறுவர் இதழ்களில் பயணித்தது. என் பாட்டி, அம்மாவைக் கவர்ந்த லக் ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி, சூடாமணி, ராஜம் கிருஷ்ணன் போன்ற பெண் ஆளுமைகள் என் மனத்தையும் வசப்படுத்தியதில் தொடர்ந்தது என் வாசிப்புப் பழக்கம்.

பள்ளிப் பருவத்திலேயே கல்கி, சாண்டில்யன், அகிலன், நா.பார்த்தசாரதி, ரமணிச்சந்திரன், ஜெயகாந்தன், மு.வ., தமிழ்வாணன் என்று பரந்து விரிந்து வாசிப்பை நான் வசப்படுத்தினேன். என் பாட்டியும் அம்மாவும் போட்டி போட்டுக்கொண்டு வீட்டில் புத்தகங்களை வாசிப்பார்கள். பொட்டலம் கட்டி வரும் சிறு தாளைக்கூட நாங்கள் வாசிக்காமல் கீழே போட்டதில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x