Published : 04 Dec 2022 07:19 AM
Last Updated : 04 Dec 2022 07:19 AM

ப்ரீமியம்
பழமைக்குத் திரும்புவதுதான் தீர்வா?

மாதவிடாய் நாட்களில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களில் இருக்கும் வேதிப் பொருட்கள் குறித்துப் பல காலமாகப் பேசிவந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த ‘toxicslink' என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வு அண்மையில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அதிக அளவில் விற்பனை செய்யப்படும் முன்னணி நிறுவனங்களின் சானிட்டரி நாப்கின்களில் பெண்களின் உடல் நலனுக்கு ஊறுவிளைவிக்கும் வேதிப்பொருட்கள் அதிக அளவில் இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆர்கானிக் நாப்கின் எனப்படும் இயற்கை நாப்கின்கள், செயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்படும் நாப்கின்கள் என இருவகையையும் உள்ளடக்கிய ஆய்வு இது. இதற்குப் பத்து நிறுவனங்களின் நாப்கின்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த நாப்கின்களில் தாலேட்டுகள், எளிதில் ஆவியாகக்கூடிய கரிமச் சேர்மங்கள் ஆகிய இரண்டும் இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. இவை இரண்டும் நம் உடலில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவவை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x