Published : 27 Nov 2022 08:10 AM
Last Updated : 27 Nov 2022 08:10 AM

ப்ரீமியம்
தினமும் மனதைக் கவனி - 6: நீங்கள் ரப்பர் பந்தா, மரத்துண்டா?

பிருந்தா ஜெயராமன்

சென்ற அத்தியாயத்தில் சொல்லப்பட்டவை இளம் பருவத்தினருக்கு மட்டுமல்ல; எல்லா வயதினருக்கும் பொருந்தும். வாழ்க்கையில் வெற்றியடைய, அறிவுத்திறன் (Intelligence Quotient - I.Q) மட்டும் போதாது; உணர்வுத்திறனும் (Emotional Quotient - E.Q) தேவை என்று கருதப்படுகிறது. நீங்கள் உணர்வுகளை வென்று மீள்பவரா அல்லது இயலாதவரா என்பதைக் கணிப்பதுதான் உணர்வுத்திறன்.

பெரிய படிப்பில் தங்கப் பதக்கம் வாங்கியவர், நல்ல வேலையில் பிரகாசிக்காமல் போவதையும், சுமாராகப் படித்தவர் வாழ்க்கை யில் வெகு உயரத்தை எட்டுவதையும் நாம் பார்க்கிறோம். உணர்வுத்திறன் நன்றாக இருப்ப வர்கள் வாழ்க்கைக் கல்வியை மாணவப் பருவத்திலேயே கற்றுக்கொள்கிறார்கள். இவர் களை மீள் தன்மையுடையவர்கள் என்போம். ரப்பர் பந்து மாதிரி கீழே விழுந்தால் அதே விசையுடன் இவர்கள் எழுந்துவிடுவார்கள். உணர்வுகளால் ஒரு ரோலர் கோஸ்டரில் மாட்டிக்கொள்பவர்கள், மீளும் தன்மை இல்லாதவர்கள். இவர்கள் ஒரு மரத்துண்டு மாதிரி, கீழே விழுந்தால் உதவியின்றி எழும்ப முடியாது. இரண்டாவது ரகத்தினர் தளர்ந்துபோக வேண்டாம். ஒரு உளவியல் ஆற்றாளர் அல்லது வாழ்க்கைத் திறன் பயிற்சியாளர் உதவியோடு தன்னை ரப்பர் பந்தாகத் தயார் செய்துகொள்ள முடியும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x