Published : 06 Nov 2022 08:05 AM
Last Updated : 06 Nov 2022 08:05 AM

ப்ரீமியம்
கிராமத்து அத்தியாயம் - 4: அண்ணணுக்கு வைக்கப்பட்ட விருந்து

பாரத தேவி

கேசவனுக்குக் கூடப்பிறந்த ஒரே ஒரு தங்கச்சி மீனாச்சி. அவ சின்னப் பிள்ளையா இருந்தபோதே அவனோட அம்மாவும் அப்பாவும் இறந்துட்டாங்க. அதனால இவன் தங்கச்சிய பாசமும் பிரியமுமா வளத்தான். அவளும் குமரியாயிட்ட உடனே இவன் தங்கச்சிக்கு நிறைய சீர் வரிசை செஞ்சி கொஞ்சம் வசதியான வீட்டுல கொடுக்கணுமின்னு ராவும் பகலுமா உழைச் சான். அப்படி உழைச்சி எப்படியோ பக்கத்தூருல நல்ல மாப்பிள்ளைக்குக் கல்யாணமும் முடிச்சி வச்சிட்டான். அவளும் புருசன்கூடப் போயிட்டா.

தங்கச்சிக்காக உழைச்சதிலையும், பசியும் பட்டினியுமா கிடந்ததுலையும் இவனுக்கு உடம்பு சரியில்லாம ரொம்ப காய்ச்சல்ல விழுந்துட்டான். இவன் ஊட்ல இருந்து மீனாச்சி ஊருக்குப் போனவக, “தாயீ உன் அண்ணன் படுத்த படுக்கையா கெடக்கான். உடம்பு தீயாக் கொளுத்துது”ன்னு சொன்னாக. அவ்வளவுதான் மீனாச்சி அப்பவே அழுதுகிட்டு அண்ணனைப் பார்க்க வந்துட்டா. வந்தவ அண்ணன சேந்துக்கட்டி அழுதா. பிறவு, “ஏன்ணே நானு ஒரு தங்கச்சி இருக்கது தெரியலயா? எதுக்காக நீ இப்படி ஒத்தையா அரை உசுரா கிடக்கணும்? என் கூட வாண்ணே. நாளைக்கே உன் மச்சினன சந்தைக்கு அனுப்பி ஒரு ஆடு வாங்கிட்டு வரச் சொல்லி வெட்டி கறிக் கொழம்பு வச்சு உப்புக்கண்டம் போட்டுத் தாரேன்”னு அண்ணனைக் கூட்டிட்டு வந்துட்டா. கேசவனும் கறி திங்கிற ஆசையில தங்கச்சி கூட வந்துட்டான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x