Published : 30 Oct 2022 08:59 AM
Last Updated : 30 Oct 2022 08:59 AM

ப்ரீமியம்
தினமும் மனதைக் கவனி - 4: எல்லாம் மூளையின் செயல்!

பதின்ம வயதினரின் மூளையும் பெரியவர்களின் மூளையும் மாறுபட்டுச் செயல்படுகின்றன. உடலியல் வளர்ச்சியின்படி ஒரு குழந்தைக்கு உயிர் வாழ்வதற்குத் தேவையான மண்டலங்கள் பிறக்கும்போதே முழுமை பெற்று விடுகின்றன. ஆனால், நரம்பு மண்டல வளர்ச்சி மட்டும் பிறந்த பின்பும் சுமார் 25 வயதுவரை தொடர்கிறது.

இந்த வயது வரம்பில் ஆய்வாளர்கள் மாறுபடுகிறார்கள். மூளையின் முன் பகுதி (Pre-frontal cortex) அறிவுபூர்வமாகச் சிந்தித்துச் செயல்பட உதவுகிறது. பெரியவர்கள் பகுத்தறிந்து செயல்படுவது இதனால்தான். பின்மூளையின் உள்புறம் உள்ள ‘அமிக்டலா’ (amygdala) எனும் பகுதி உணர்வுகளுக்குப் பொறுப்பாகிறது. அமிக்டலாவுக்கும் மூளையின் முன் பகுதிக்கும் உள்ள இணைப்பு பதின்மவயதில் வலுவடையாமல் இருக்கும். இதனால், எண்ணங்கள் வரும்முன் உணர்வுகள் அலை மோத ஆரம்பிக்கும். சிந்திக்க நேரமில்லை; அதனால்தான் உணர்வுப்பூர்வமாகவே அவர்கள் செயல்படுகிறார்கள். பின் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் கண நேரத்தில் ஓர் உந்துதலால் தீர்மானத்தை எடுத்துவிடுகிறார்கள் என்று மருத்துவம் சொல்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x