Published : 23 Oct 2022 10:19 AM
Last Updated : 23 Oct 2022 10:19 AM

ப்ரீமியம்
என் பாதையில்: இப்படியும் சிலர்

எத்தனையோ வெற்றியாளர்கள் திரும்பத்திரும்ப ஒரே விஷயத்தை அறிவுறுத்துவதை நான் கேட்டதுண்டு. உறுதி என்னும் மாமந்திரம்தான் அது. ஆனால், நான் கண்ட ஒருவரின் வாழ்க்கைப் பயணம் அப்படியல்ல. என் சிறு வயதிலிருந்தே அவரை எனக்குத் தெரியும். அப்போது, அவர் கல்லூரி சென்றுகொண்டே அரசுப் பணித் தேர்வுக்கும் தயாரானார். இதனால், ஊரில் நல்ல மதிப்பு அவருக்கு. என் பெற்றோர்கூட நம் பிள்ளை இவரைப் போல படிக்க வேண்டும் எனப் பேசிக்கொள்வதை நான் கேட்டதுண்டு.

அடுத்தவர் அவரை நினைத்துப் பெருமைகொள்ளும்போது அவருடைய வீட்டில்? நல்ல செல்வாக்குதான். எதற்காக, இவ்வளவு பெருமை. இப்போது பலரும் போட்டித் தேர்வுகளுக்குப் படித்துக்கொண்டிருக்கிறார்கள்தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இது நடந்தது போட்டித் தேர்வுகள் குறித்துப் பரவலாக அறியப்படாத காலத்தில். இவ்வளவு பெருமையும் அவருக்குக் குறுகிய காலமே இருந்தது. உயர்நிலைப் படிப்புகளை முடித்துவிட்டு அரசுப் பணியாளர் தேர்வுக்குத் தயாராவதை முழுநேரப் பணியாகக் கொண்டார். நாட்கள் கடந்து செல்லச் செல்ல பெற்றோரும் மற்றோரும் முகத்தைச் சுருக்கினர். அவர் அதையெல்லாம் கண்டும் காணாதவராகப் படித்தார். பெற்றோர் வற்புறுத்தலால் திருமணம் நடந்தது. சில நாட்களுக்குள்ளேயே படிப்பின் பக்கம் திரும்பிவிட்டார் சற்று தீவிரத்துடன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x