Published : 25 Sep 2022 07:15 AM
Last Updated : 25 Sep 2022 07:15 AM
அந்தக் காலத்தில் கல்யாணம் முடிந்து விட்டால் புருசனும் பொண்டாட்டியும் மூன்று மாதம் வரை சேரக் கூடாது. மாப்பிள்ளைக்கு இந்த மூன்று மாதமும் விருந்து சாப்பாடு போட வேண்டும். பெரியம்மா, சின்னம்மா, பாட்டி என்றுதான் அவனுக்குச் சாப்பாடு வைப்பார்கள். தாலிகட்டிய பொண்டாட்டி அவன் எதிரிலேயே வர மாட்டாள். அவள் எப்போதும் காடுகளில் வேலை செய்துகொண்டு இரவில் சேத்திக்காரிகளோடு படுத்துக்கொள்வாள். மூன்று மாதம் கழித்து பெரிய மறுவீடு வைத்த பிறகுதான் புருசன், பொண்டாட்டியோடு பேச வேண்டும்.
கோபாலனுக்கும் புசுப்பாவுக்கும் கல்யாணம் முடிந்து இரண்டு மாதம் ஆகிவிட்டது. ஆனாலும், புசுப்பா இவன் எதிரே வரவேயில்லை. கோபாலனுக்குப் பொண்டாட்டி மீது அப்படி ஒரு கோபம். ஒரே வீட்டுக்குள்ளதான நம்மகூட இருக்கா? வெளிய போவும்போது, வரும்போது ஒரு கனிவான பார்வ, ஒரு சிரிப்புன்னு சிரிச்சிட்டுப் போவலாமில்ல. நம்ம கண்ணுக்குக்கூடத் தட்டுப்பட மாட்டேங்கா. நானு என்ன இவள கடிச்சா முழுங்கிரு தேன்னு மனசுக்குள்ளையே கடுகடுத்துக்கிட்டு இருந்தான். இரண்டு, மூணு நாளு வேலை செஞ்ச இடத்துக்கும் போயி பார்த்தான். ஆனா, அவ வேலையிலதேன் மும்முரமா இருந்தாளே தவுத்து, இவன என்னுன்னுகூடத் திரும்பிப் பாக்கல.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT