Published : 25 Sep 2022 07:44 AM
Last Updated : 25 Sep 2022 07:44 AM

ப்ரீமியம்
கு.அழகிரிசாமி நூற்றாண்டு - செப்டம்பர் 23: இரு பெண்கள், ஒரு வீடு

கவிதா நல்லதம்பி

நவீனத் தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பு சக்தியான கு.அழகிரிசாமியின் விஸ்தாரமான நாவல், ‘புது வீடு புது உலகம்’. சிறுகதைப் பரப்பில் மனித உறவுகளையும் மன உணர்வுகளையும் ஒரு குறிப்பிட்ட கால, இடச் சூழலின் பின்புலத்தில் அபாரமாகவும் நுட்பமாகவும் வசப்படுத்திய மேதை கு. அழகிரிசாமி.

சென்னை போன்ற பெருநகர வாழ்வைச் சிறிதும் விரும்பாதவரான கு.அழகிரிசாமியின் இந்நாவல், ஏழ்மையினால் எந்தவொரு சுகவாசத்தையும் அறியாமல் சென்னை நகரத்தில், வாடகைக் குடித்தனத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் இரு பெண்களைப் பற்றியது. பேரழகும் பண்பும் கொண்ட அவர்கள், வறுமை காரணமாகப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியவர்கள். வாழ்ந்து கெட்டு, வறட்டுப் பிடிவாதங்களோடு வாதத்தினால் படுத்த படுக்கையாகிவிட்ட தந்தையும் தன் பெண் பிள்ளைகளை எப்படிக் கரையேற்றுவது என்று பெருமூச்செறிந்து கொண்டிருக்கும் தாயும் கொண்ட குடும்பம் அது. அண்டை வீட்டாரின் சகவாசமும் பரிவும் கிட்டுவதே அவர்களைப் பொறுத்தவரை பெரும் சாதனை. மூத்தவள் சரளா எடுக்கும் டியூஷன்களில் கிடைக்கும் குறைந்த பணத்தைக் கொண்டு கஷ்ட ஜீவனம். பெண்களாக இருப்பதாலேயே ஒழுக்கம் சார்ந்த அவதூறுகளுக்கும் காரணங்களற்ற பொறாமைக்கும் ஆளாகி இடம்பெயர்ந்தவர்கள் அவர்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x