Published : 04 Sep 2022 10:06 AM
Last Updated : 04 Sep 2022 10:06 AM
கடந்த ஆகஸ்ட் 18 அன்று வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் வணிக வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றிருக்கிறது. அதிரடி சண்டைக் காட்சிகள் எதுவும் இல்லாத நல்லுணர்வுத் திரைப்படம் (ஃபீல் குட்) என்று வகைப்படுத்தப்படும் ‘திருச்சிற்றம்பலம்’ மேம்போக்கான நல்லுணர்வு கேளிக்கைப் படம் என்பதைத் தாண்டியும் முக்கியத்துவம்பெறுகிறது.
படத்தின் நாயகனான திருச்சிற்றம்பலம் (தனுஷ்) தாயையும் தங்கையையும் விபத்தில் இழந்தவன். கண்ணுக்கு முன் நிகழ்ந்த அந்த விபத்தின் காரணமாக அவன் வன்முறையைக் கண்டு அஞ்சும் சுபாவம் கொண்டவனாக வளர்கிறான். தன்னுடைய நெருங்கிய தோழியை ஒருவன் இழிவான வார்த்தைகளால் அவமதிக்கும்போதுகூட அவனுடன் மோதுவதற்குப் பதிலாகத் தோழியைக் கூட்டிக்கொண்டு அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிடுகிறான். மிகப் பெரிய ரசிகர் படையைக் கொண்ட தனுஷ் போன்ற நட்சத்திர நடிகர் இப்படிப் பயந்த சுபாவம் கொண்டவராகக் கிட்டத்தட்ட படம் முழுக்க நடித்திருப்பதே வரவேற்கத்தக்க முன்னேற்றம். ஆண் என்றால் அதிவீர புஜபல பராக்கிரமசாலியாக இருக்க வேண்டும் என்னும் பிம்பத்தைத் தகர்க்க இதுபோன்ற நாயக சித்தரிப்புகள் உதவும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT