Published : 28 Aug 2022 11:01 AM
Last Updated : 28 Aug 2022 11:01 AM

ப்ரீமியம்
பெண்கள் 360: தந்தைக்குத் தண்டனை பெற்றுத்தந்த மகள்கள்

தங்கள் தாயைக் கொன்ற வழக்கில் தந்தைக்குத் தண்டனை பெற்றுத்தர ஆறு ஆண்டுகளாகப் போராடியுள்ளனர் இரு மகள்கள். உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷர் நகரத்தைச் சேர்ந்தவர் மனோஜ் பன்சால். இவருடைய மனைவி அனு. இவர்களுக்கு லத்திகா, தான்யா என இரு மகள்கள். தங்கள் வம்சத்தின் பெருமையைக் காக்க ஆண் குழந்தை வேண்டும் என்று மனைவியைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார் மனோஜ். கருவில் இருக்கும் குழந்தை பெண் என்று தெரிந்து அனுவுக்கு ஆறு முறை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. இப்படியொரு சூழலில் 2016இல் அந்தக் கொடூரத்தை மனோஜ் அரங்கேற்றினார்.

அப்போது மூத்த மகள் லத்திகாவுக்கு 15 வயது, இளையவள் தான்யாவுக்கு 11 வயது. தங்கள் குடும்பத்தினர் ஆதரவுடன் அனு மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்தார் மனோஜ். “2016 ஜூன் 14 அன்று எங்கள் அம்மாவின் அலறல் கேட்டுத்தான் நாங்கள் கண் விழித்தோம். எங்கள் அம்மா எரிந்துகொண்டிருந்தார். நானும் என் தங்கையும் இருந்த அறை வெளிப்புறமாகப் பூட்டப்பட்டு இருந்ததால் அம்மா எங்கள் கண் முன் எரிந்து அடங்குவதை நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம்” என்று விசாரணை நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார் லத்திகா.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x