Last Updated : 24 Jul, 2022 11:00 AM

 

Published : 24 Jul 2022 11:00 AM
Last Updated : 24 Jul 2022 11:00 AM

ப்ரீமியம்
நம்பிக்கை தரும் மகளிர் அணி

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44ஆவது ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கவுள்ளன. கரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகளாக ஆன்லைனில் நடைபெற்ற இப்போட்டிகள் மீண்டும் நேரடியாக நடைபெறவிருக்கின்றன. இந்தியாவில் முதன் முறையாக நடைபெறும் இந்தத் தொடரில் பங்கேற்கவிருக்கும் 30 பேர் அடங்கிய இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதில் மகளிர் அணியில் 15 பேர் பங்கேற்க உள்ளனர்.

கொனேரு ஹம்பி, டி. ஹரிகா, ஆர். வைஷாலி, தானியா சச்தேவ், பக்தி குல்கர்னி ஆகியோர் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளார்கள். வந்திகா அகர்வால், சவுமியா சுவாமிநாதன், மேரி அன் கோம்ஸ், பத்மினி ரவுத், திவ்யா தேஷ்முக் ஆகியோர் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளார்கள். ‘சி’ பிரிவில் ஈஷா கரவடே, வர்ஷினி ஷாகிதி, பிரதியுஷா போடா, பி.வி.நந்திதா மற்றும் வர்ஷா வாஷ்ணவாலா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 98 ஆண்டு கால செஸ் ஒலிம்பியாட்டில் கடந்த 2014ஆம் ஆண்டில் நார்வேயில் நடைபெற்ற நேரடி செஸ் ஒலிம்பியாட் போட்டியில்தான் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. ஆடவர் அணி வென்ற பதக்கம் அது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x