Published : 24 Jul 2022 11:00 AM
Last Updated : 24 Jul 2022 11:00 AM
முற்போக்கு குறித்தும் பெண்ணுரிமை குறித்தும் ஊருக்கெல்லாம் பாடம் நடத்தும் கட்சியாகத் தன்னை முன்னிறுத்துகிறது திமுக. ஆனால், அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் இருவர் பொதுவெளியில் பெண்களிடம் நடந்துகொண்ட விதம் பலரையும் முகம்சுளிக்க வைத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் பாலவ நத்தம் கிராமத்தில் தன்னிடம் மனு கொடுத்த பெண்ணை அந்த மனுவாலேயே தலையில் அடித்தார் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். அந்த வீடியோ வைரலானதுடன், ‘பொதுமக்களின் குறை தீர்க்கும் பொறுப்பில் இருப்பவரே இப்படி நடந்துகொள்ளலாமா?’ என்பது போன்ற எதிர்வினைகளும் எழுந்தன. அம்மாவுக்கு முதியோர் நல நிதி கிடைப்பதற்காகத் தான் மனு கொடுத்ததாகவும் அமைச்சர் தன்னை அடிக்கவில்லை, பாசத்துடன் தட்டிக்கொடுத்ததாகவும் அந்தப் பெண் கூறினார். தானும் அந்தப் பெண்ணும் உறவினர்கள் என்று தன் பங்குக்கு அமைச்சரும் விளக்கம் அளித்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT