Published : 02 Aug 2015 02:22 PM
Last Updated : 02 Aug 2015 02:22 PM

கேரட் ஜூஸ் குடித்தால் இளைக்கலாம்

# கைப்பிடி அளவு கல் உப்பை சிறு மூட்டையாக முடிந்து, அரிசி மூட்டைக்குப் பக்கத்தில் வைத்தால் பூச்சிகள் அண்டாது.

# அரிசி, காய்கறிகளைக் கழுவிய தண்ணீரைச் செடிகளுக்கு ஊற்றினால் நன்றாகச் செழித்து வளரும்.

# காய்ந்த எலுமிச்சை தோலை அலமாரியில் போட்டால் பூச்சிகள் வராது.

# பச்சை மிளகாயைக் காம்பு கிள்ளி, செய்தித்தாளில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாது.

# ஆடைகளில் ஸ்கெட்ச் பேனாவால் கறை ஏற்பட்டால், நெயில் பாலிஷ் ரிமூவரைத் தேய்த்தால் கறை நீங்கும்.

# வெள்ளிப் பாத்திரங்கள் வைத்திருக்கும் பையில் சிறிது கற்பூரத்தைப் போட்டுவைத்தால் வெள்ளி கருக்காது.

- செ. தீபாராணி, மேபூதகுடி, இலுப்பூர்.

# முட்டைகோஸை வேகவைத்து அரைத்து, அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்துத் தலையில் தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்து குளித்தால் முடி உதிர்வது குறையும்.

# படிகாரத்தைத் தண்ணீரில் கரைத்து, முகத்தில் தடவிவந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் குறையும்.

# காஸ் அடுப்பில் சமைக்கும்போது தீயைக் குறைத்து வைத்துச் சமைத்தால் எரிபொருள் செலவு குறைவதுடன், சமைத்த உணவும் சுவையாக இருக்கும்.

# டைனிங் டேபிளில் வேப்பிலையைக் கசக்கிவைத்தால், ஈக்கள் மொய்க்காது.

# குக்கரின் உள்ளே கறைபடிந்திருந்தால் பெரிய வெங்காயத்தை நறுக்கித் தேய்த்தால் போய்விடும்.

# வெள்ளைத் துணிகளைத் துவைக்கும்போது தண்ணீரில் சிறிதளவு டேபிள் சால்ட் கலந்துகொண்டால் துணி வெண்மையாகும்.

# கேரட்டை அரைத்து மோருடன் கலந்து குடித்துவர உடல் பருமன் குறையும்.

- பிரேமா தியாகராஜன், திருச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x