

திருமணத்தின் முக்கிய நிகழ்வு மணமக்கள் அலங்காரம். மணமக்களின் திருமண ஆடைகளுக்கென்றே பிரத்யேகமாக, ‘மெட்ராஸ் பிரைடல் ஃபேஷன் ஷோ’ கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. பல்வேறு கலாச்சாரங்களை ஒன்றிணைத்து வேற்றுமைகளின் சங்கமத்தைப் பறைசாற்றிய இந்த ஃபேஷன் அணிவகுப்பை டிரான்ஸ் கார்ஸ் மற்றும் சிம்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்தின. இந்தியாவின் சிறந்த ஆடை வடிவமைப்பாளர்களான அஞ்சலி, அர்ஜுன் கபூர், ரெஹானா பஷீர், ஷ்ரவன் குமார், நௌஷிஜா, சுமோனா, ரிங்கு சோப்டி, சிட்னி சிலேடன் ஆகியோரின் வடிவமைப்பில் உருவான ஆடைகளைத் திரைப்பட நடிகைகள் அணிந்து வலம்வந்தனர்.