பர்வதமலையாக உயர்ந்து நிற்கும் பாட்டி! | ஆயிரத்தில் ஒருவர்

பர்வதமலையாக உயர்ந்து நிற்கும் பாட்டி! | ஆயிரத்தில் ஒருவர்
Updated on
1 min read

பள்ளிப் பருவத்தில், ‘என்னடீ, உனக்குச் சுத்த கர்னாடகமா பேரு வச்சிருக்காங்க’ என்று தோழிகள் கேலி செய்வதுண்டு. அதில் எனக்கு வருத்தம். அப்பாவிடம் விசாரித்தபோது தன்னுடைய பாட்டி பர்வதத்தம்மாள் பெயரைத்தான் எனக்கு வைத்திருப்பதாகச் சொன்னார். ‘யார் அந்தப் பாட்டி? அவங்க பேரை எனக்கு எதுக்கு வைக்கணும்?’ என்று சற்று கோபமாகவே கேட்டபோதுதான் அவரைப் பற்றிச் சொன்னார்.

என் அப்பாவின் அம்மாவழிப் பாட்டி பர்வதத்தம்மாளுக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்த மூன்று வருடத்திற்குள் கணவர் இறந்துவிட்டார். சொந்த ஊருக்குக் கைக்குழந்தையுடன் திரும்பினார். பாட்டிக்கு மூன்று அண்ணன்கள். வசதியும் செல்வாக்குமாக வாழ்ந்தவர்கள். கைம்பெண்ணாக வீட்டுக்கு வந்த தங்கையைத் தங்களுடன் இருக்குமாறு சொல்கிறார்கள். மறுத்துவிட்டுத் தனக்கு ஒரு வீடு தருமாறு கேட்டு, அதில் தன் மகளுடன் வசித்தார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in