Published : 04 May 2025 07:19 AM
Last Updated : 04 May 2025 07:19 AM
எனக்குத் தெரிந்த ஒரு பெண் சமீபத்தில் மறுமணம் செய்துகொண்டார். மறுமணத்துக்கு முன்பு வரை அவருடைய உறவினர்களும் நண்பர்களும், “அவ நல்ல பொண்ணு; பாவம் அவளுக்குக் கல்யாண வாழ்க்கை சரியா அமையல” என்றெல்லாம் பரிதாபப்பட்டு, அக்கறைப்பட்டு பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால், விவாகரத்து ஆன ஒருவரை அந்தப் பெண் திருமணம் செய்துகொண்டார் என்று தெரிந்தவுடன் அவரைப் பற்றி மிக மோசமாக இகழ்ந்து பேசினார்கள். “இந்த வயசுல கல்யாணம் தேவையா? ஒரு வயசுக்கு அப்புறம் எல்லாத்தையும் அடக்கத் தெரியாதா?” என்றெல்லாம் அவரைக் கொச்சைப்படுத்தி பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தச் சொற்கள் அந்தப் பெண்ணின் காதுகளுக்குச் சென்று அவரைக் காயப்படுத்திவிடக் கூடாது என நினைத்துக்கொண்டேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT