

கடந்த ஆண்டு நிகழ்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிக மிகக் கொடூரமான முறையில் அவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவருடைய மனைவி பொற்கொடி மீதும் அவருடைய குழந்தை மீதும் மக்களின் அன்பும் அரவணைப்பும் கருணையும் இரக்கமும் அதிகரித்தன.
ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்குப் பிறகு கணவர் சார்ந்த கட்சியிலேயே பொற்கொடி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக அமர்த்தப்பட்டபோது அவருக்கு அது மிகப் பெரிய ஆறுதலாக மட்டுமல்ல; தன் கணவரின் கொள்கைகளை முன் நின்று எடுத்துச் செல்ல ஒரு நல்ல வாய்ப்பாகவும் இருக்கும் என்று கருதினேன்.