

கோவையைச் சேர்ந்த அருணாவுக்குச் சிறு வயது முதலே எளியோருக்கு உதவுவதில் ஆர்வம். படித்து முடித்ததும் தன் தோழியோடு சேர்ந்து ஆதரவற்ற குழந்தைகள் 60 பேருக்கு உணவு கொடுத்ததோடு சிறு சிறு உதவியையும் செய்தார். கோவைக்கு அருகில் உள்ள மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கும் உதவிசெய்தார். அதில் கிடைத்த நிறைவு அருணாவைத் தொடர்ந்து அது சார்ந்தே இயங்க வைத்தது.
மாற்றுத்திறனாளிகள், பழங்குடியின மக்களுக்கு உதவுவதற்காக அவர்களோடு நெருங்கிப் பழகியபோதுதான் நம்மைச் சுற்றி ஏராளமானோர் பல்வேறு பிரச்சினைகளால் அல்லல்படுவது அருணாவுக்குப் புரிந்தது. தன் வேலை நேரம் போக மற்ற நேரத்தைச் சேவை செய்வதற்காக ஒதுக்கிக்கொண்டார்.