வாசிப்பை நேசிப்போம்: நிறைவேறிய கனவு!

வாசிப்பை நேசிப்போம்: நிறைவேறிய கனவு!
Updated on
1 min read

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே என் அம்மாவை அவரது ஓய்வு நேரத்தில் புத்தகமும் கையுமாகத்தான் பார்த்திருக்கிறேன். வரலாற்று நாவல்கள், வார இதழ்கள் என அனைத்தையும் வாசிப்பார். அம்மாவின் வாசிப்புப் பழக்கம் எனக்கும் வந்துவிட்டது.

நான் பள்ளியில் படித்தபோது உணவு இடைவேளையிலும் ஓய்வு நேரத்திலும் பள்ளி நூலத்தில் இருந்து புத்தகங்களை எடுத்துப் படிப்பேன். மு.வரதராசனார், கல்கி, அகிலன் போன்றோர் எழுதிய புத்தகங்கள்தான் நூலகத்தில் இருக்கும். இவற்றை ஒரே நேரத்தில் படித்து முடித்துவிட முடியாது என்பதால் இடைவெளி விட்டுப் படித்தேன்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in