

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் மார்ச் 23 அன்று மதுரை தல்லாகுளத்தில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் திருவிழா வாசகியரின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தோடு களைகட்டியது. இளநிலாவின் வீணை இசையோடும் ப.சிவரஞ்சனியின் சிவாலயா நாட்டியப் பள்ளி மாணவியரின் பரதநாட்டியத்தோடும் நிகழ்ச்சி தொடங்கியது.
மதுரை சமயநல்லூரில் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான இல்லத்தை 23 ஆண்டுகளாக நடத்திவரும் ஆர்.லதா, இயற்கை முறையில் ஸ்கின் கிரீம் தயாரிக்கும் மதுரை பரவையைச் சேர்ந்த கிருத்திகா இருவருக்கும் உஜாலா லிக்விட் டிடர்ஜென்ட் வுமன் ஆஃப் சப்ஸ்டன்ஸ் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.